‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலியை கொலை செய்ய முயற்சிக்கும் வெண்பா – அடுத்த ட்விஸ்டு!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் அஞ்சலியை கொலை செய்ய முயற்சிக்கும் வெண்பா - அடுத்த ட்விஸ்டு!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் அஞ்சலியை கொலை செய்ய முயற்சிக்கும் வெண்பா - அடுத்த ட்விஸ்டு!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலியை கொலை செய்ய முயற்சிக்கும் வெண்பா – அடுத்த ட்விஸ்டு!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலிக்கு கொடுத்த மருந்து அவரது பிரசவ நேரத்தில் பிரச்சனையை உண்டாக்கும் நிலையில் உண்மை தெரிந்து விடும் என்ற பயத்தில் வெண்பா அவரை கொலை செய்ய முயற்சி செய்வது போல அடுத்த கட்ட கதைக்களம் வெளியாக இருக்கிறது.

பாரதி கண்ணம்மா

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வரும் புதிய எபிசோடுகளில் அஞ்சலியை மையமாக வைத்து சில ஸ்வாரசியமான சம்பவங்கள் நடந்தேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த சீரியலின் ஆரம்பத்தில் கண்ணம்மா மீது வெறுப்புடன் இருக்கும் அஞ்சலி 8 ஆண்டுகளுக்கு பிறகு அவரை சந்திக்கும் போது கோபம், வெறுப்பு எல்லாவற்றையும் மறந்து நட்புறவாக பழகி வருகிறார். இது தவிர ஹேமாவை கண்ணம்மாவுடன் சேர்த்து வைக்கவும் அஞ்சலி முயற்சித்து வருகிறார்.

அச்சு அசலாக பாரதி கண்ணம்மா ரோஷினி போலவே தோற்றமளிக்கும் வினுஷா – ரசிகர்கள் ஷாக்!

மறுபக்கத்தில் இந்த வாரம் வெளியான ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோவில் கண்ணம்மாவின் சூழ்ச்சி காரணமாக வெண்பா போலீசாரால் அரெஸ்ட் செய்யப்படுகிறார். எதிர்பாராத இந்த நிகழ்வினால் பாரதி மற்றும் சௌந்தர்யா குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த காட்சிகள் உண்மையில் நடக்கிறதா அல்லது இதுவும் வெறும் கனவாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இப்படி இருக்க ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நீண்ட நாட்களாக அஞ்சலி கர்ப்பமாக இருப்பது போல காட்டப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் பாரதி எழுதி கொடுத்ததாக சொல்லி வெண்பா கொடுக்கும் மருந்தை அஞ்சலி சாப்பிட்டு வருகிறார். இதனால் ஏற்படும் பாதிப்பு அவரது உடலில் இருந்து வருகிறது. இப்போது பிரசவ வலியால் துடிக்கும் அஞ்சலியை சௌந்தர்யா குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அங்கு அஞ்சலியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் பாரதி கொடுத்த மருந்து தவறானது, அதனால் அஞ்சலியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கண்டுபிடிக்கின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ திரை விமர்சனம் – படம் எப்படி இருக்கு?

ஆனால் அந்த மருந்தை கொடுத்தது வெண்பா தான் என்கிற உண்மையை அஞ்சலி தனது குடும்பத்தாரிடம் சொல்வாரா என்பது சஸ்பென்சாக இருக்கிறது. ஆனால் அஞ்சலி இந்த உண்மையை சொல்லிவிட்டால் தன் குட்டு வெளிவந்துவிடும் என பயப்படும் வெண்பா அவரை கொலை செய்ய வருவதை போல சில சம்பவங்கள் அடுத்தகட்ட எபிசோடுகளில் நடைபெறலாம் என சொல்லப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!