கண்ணனை ஏற்றுக் கொள்ள மறுக்கும் மூர்த்தி, ஐஸ்வர்யாவிற்கு உதவி செய்யும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஐஸ்வர்யா இட்லி விற்பதை பார்த்த கஸ்தூரி மூர்த்தி கண்ணனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என சொல்கிறார். ஆனால் மூர்த்தி மறுக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனும் ஐஸ்வர்யாவும் இட்லி கடை தொடங்கிய நிலையில் அதை பார்த்த கஸ்தூரி மூர்த்தி வீட்டிற்கு வருகிறார். அப்போது இருவரும் இட்லி கடை தொடங்கி இருக்கிறார். ஐஸ்வர்யா இப்படி இருப்பதை பார்க்க கஷ்டமாக இருக்கிறது. என்ன தான் தப்பு செய்திருந்தாலும் சின்ன பசங்க எதாவது செய்யலாம் என சொல்கிறார். ஆனால் மூர்த்தி முடியாது என சொல்ல, வாழ்க்கையில் கஷ்டம் எல்லாம் தெரியட்டும் என சொல்கிறார். மூர்த்தி வெளியே வர கண்ணன் ஐஸ்வர்யா இட்லி விற்றுக் கொண்டிருக்கின்றனர்.
அதை பார்த்து மூர்த்தி வருத்தப்படுகிறார். பின் கஸ்தூரி மூர்த்தி தனம் சொல்லி கூட கேட்காமல் இருக்கிறார் என சொல்கிறார். தனம் வீட்டில் இன்னும் சமைக்கவில்லை என சொல்ல, முல்லை சீக்கிரமாக செய்துவிடுகிறேன் என சொல்கிறார். அப்போது தனம் ஐஸ்வர்யா இட்லி விற்பதை பார்த்தால் யாரு வாங்குவா என கேட்கிறார். மீனா ஆமாம் எப்போதும் நம்ம ஏரியா ஆளுங்க வாங்கமாட்டார்கள் என சொல்கிறார். முல்லை ஐஸ்வர்யாவை திட்ட, மீனா அவங்க ஏன் சூப்பர் மார்க்கெட் போகவில்லை என கேட்கிறார். அடுத்தவர்களிடம் வேலை பார்க்காமல் இருக்கனும் என நினைக்கிறார்களோ என மீனா சொல்கிறார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஐக்கியின் முதல் பதிவு – உற்சாகத்தில் ரசிகர்கள்!!
தனம் முல்லையை அனுப்பி ஐஸ்வர்யாவிடம் இட்லி வாங்கி வர சொல்கிறார். ஆனால் முல்லை முடியாது என சொல்ல மீனா நானே வாங்கி வருகிறேன் என சொல்கிறார். பின் தனம் பாத்திரம் கொடுத்து அனுப்ப மீனா கிளம்புகிறார். தனம் முல்லையிடம் ரொம்ப கோவப்படுகிறாய் என சொல்கிறார். மீனா இட்லி வாங்க செல்ல, ஐஸ்வர்யா பார்த்து இட்லி வேண்டுமா என மீனாவிடம் கேட்கிறார். சொந்தக்கரவங்களாக இருந்தாலும் காசு வாங்குவேன் என ஐஸ்வர்யா சொல்கிறார். மீனா இட்லி வாங்க சூப்பர் மார்க்கெட்டில் ஏன் வேலை செய்யவில்லை என கேட்கிறார். அப்போது கதிர் உங்களிடம் எதுவும் பேசவில்லையா என கேட்க, அவர் என்ன சொல்லவேண்டும் என கேட்கிறார்.
அதெல்லாம் ஒன்றுமில்லை என கண்ணன் சொல்ல, ஐஸ்வர்யா சொல்ல வருகிறார் ஆனால் கண்ணன் சொல்லவிடாமல் தடுக்கிறார். ஐஸ்வர்யா இட்லி வைத்து கொடுக்க, சாம்பார் நிறைய வேண்டும் என மீனா சொல்கிறார். பின் தினமும் இட்லி வாங்குவீங்களா என கேட்க, ஆமாம் என மீனா சொல்கிறார். உங்க வீட்டை நம்பி தான் வியாபாரம் தொடங்கினேன் என ஐஸ்வர்யா சொல்ல, எங்க வீட்டில் எல்லாரும் எப்படி நல்லவர்களாக இருக்காங்க பார்த்தீங்களா என கேட்கிறார்.
‘பாரதி கண்ணம்மா’ நடிகர் அருணின் புதிய கெட்அப் – சீரியல் முடிவுக்கு வருகிறதா? ரசிகர்கள் ஷாக்!
ஜீவா மூர்த்தியிடம் என்ன யோசிக்கிறீங்க என கேட்க, கண்ணனை பற்றியா என கேட்கிறார். எப்படி சரியாக சொன்ன என மூர்த்தி கேட்க, நானும் அதை பற்றி தான் நினைக்கிறேன் இந்த வயதில் இப்படி கஷ்டப்படுறாங்க ஆனால் பொறுப்பாக இருக்கான் என மூர்த்தி சொல்கிறார். பின் ஜீவா அவனை நம்ம வீட்டிற்கு கூப்பிட்டால் என்ன என கேட்க மூர்த்தி அதிர்ச்சி அடைகிறார்.