பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் மற்றொரு நாயகி? காரணம் இதுவா – ஷாக்கில் ரசிகர்கள்!
தற்போது சினிமா மற்றும் சின்னத்திரை என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் மாறி மாறி நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை சீரியலில் இருந்து நடிகை ஒருவர் சினிமாவிற்குள் அடி எடுத்து வைத்துள்ளார்.
சினிமா வாய்ப்பு:
சமீப காலமாக மெகா ஸ்டார் நடிகர்கள் அனைவரும் சின்னத்திரையை நோக்கி படையெடுத்து வருவதும், சீரியல் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் சினிமாவில் ஜொலிப்பதும் நடந்து வருகிறது. பல ஹிட் படங்களில் நடித்து, அதிக பேமஸாகி உள்ளவர்கள் கூட சின்னத்திரை மூலம் மக்களிளை தினசரி சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதால் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
ஆனால், அதேசமயம் சின்னத்திரை கலைஞர்கள் எப்படியாவது சினிமா வாய்ப்பு கிடைத்து சினிமாவில் வெள்ளித்திரையில் நடித்து விட வேண்டும் என்று கனவில் உள்ளனர். இந்த கனவு பலருக்கும் நிஜமாகி உள்ள நிலையில், சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த காவ்யா தொடர் சினிமா வாய்ப்பு காரணமாக சீரியலில் இருந்து விலகிவிட்டார். இத்தனைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் காவ்யாவிற்கு வாழ்வில் திருப்பு முனையாக அங்கீகாரத்தை பெற்று தந்த சீரியல் ஆக இருந்தது.
Exams Daily Mobile App Download
இந்த வரிசையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து நடிகை சாய் காயத்திரி அதாவது ஐஸ்வர்யாவிற்கும் சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது. சாய்காயத்திரி அதை சீக்ரெட் ஆக வைத்துள்ளார். சமீபத்தில் தான் படத்தின் டப்பிங்கின் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு விஷயத்தை சொல்லி இருக்கிறார். காவ்யாவை போல் சாய் காயத்ரியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு டாடா காட்டி விடுவாரோ என்று சின்னத்திரை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.