வீட்டை விட்டு வெளியேறும் பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – ப்ரோமோ ரிலீஸ்!
கோபியை பற்றிய அனைத்து உண்மைகளுமே பாக்கியாவிற்கு தெரியவந்துவிட்டது. இதற்கு மேலும் கோபியுடன் இருக்க கூடாது என வீட்டை விட்டு பாக்கியா வெளியேறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை பற்றிய உண்மைகள் பாக்கியாவிற்கு தெரிய வந்த பிறகு அடுத்து பாக்கியா என்ன முடிவெடுக்க போகிறார் என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதாவது, ராதிகாவிற்கும் கோபிக்கும் இடையே என்ன உறவு இருக்கிறது என்கிற அனைத்து உண்மையுமே தெரிந்துவிட்டது. இதனை பார்த்த பிறகு தான் பாக்கியாவிற்கு அனைத்துமே புரிய வருகிறது. அதாவது, எதற்காக கோபி பாக்கியாவை பிடிக்கவில்லை என கூறினார். கோபி இரவில் யாரிடமோ போனில் பேசிவது என்ற அனைத்துமே புரிய வருகிறது.
Exams Daily Mobile App Download
இதுமட்டுமல்லாமல் ராதிகாவை பார்த்தாலே கோபி ஓடி ஒளிந்துகொள்வது என அனைத்தையுமே நினைத்து பார்க்கிறார் மற்றும் இத்தனை நாட்களாக இவ்வளவு முட்டாளாக இருந்துவிட்டோமே எனவும் பாக்கியாவிற்கு கோவம் வருகிறது. இதன் பின்பு கோபி வீட்டிற்கு வந்ததும் அவரை உள்ளே போகவிடாமல் பாக்கியா தடுத்து உண்மையை கோபி வாயால் தெரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறார். பின்பு, மருத்துவமனையில் உங்களுக்கு யார் பணம் கட்டினார்கள் என பாக்கியா கேட்கிறார். உடனே, எழிலும் செழியனும் கோபியின் மனைவி கட்டியதாக தானே கூறினார்கள் என கூறுகின்றனர்.
ஜீவாவிற்கு உதவியாக கடை வேலைகளை பார்க்கும் தனம், ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்த கதிர் – இன்றைய எபிசோட்!
உடனே, பாக்கியா கோபியின் மனைவி என்று தானே கூறினார்கள். பாக்கியலட்சுமி கட்டினார் என்று கூறவில்லையே என பாக்கியா கூறுகிறார். அதாவது, பாக்கியா என்ன கூறுகிறார் என்பதே யாருக்கும் புரியவில்லை. ஆனால், கோபி மட்டும் உண்மை பாக்கியாவிற்கு தெரிந்துவிட்டதோ என பயப்படுகிறார். இதன் பின்பு, குடும்பத்தினர்கள் முன்னிலையில் கோபியை பற்றிய உண்மைகள் அனைத்தையும் பாக்கியா போட்டுடைக்கிறார். இதற்கு மேலும் இந்த வீட்டில் இருக்க முடியாது என பாக்கியா வீட்டை விட்டு கிளம்பும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.