ஜீவாவிற்கு உதவியாக கடை வேலைகளை பார்க்கும் தனம், ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்த கதிர் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூர்த்தி கடைக்கு போகாமல் வேலை நிறைய இருக்க உடனே தனம் நான் கடைக்கு செல்கிறேன் என சொல்கிறார். பின் கதிர் புதிதாக ஹோட்டலில் வேலைக்கு சேருகிறார். பின் தனம் ஜீவா உடன் இணைந்து கடை வேலைகளை செய்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தியிடம் தனம் கதிர் வீட்டிற்கு சென்றதாக சொல்கிறார். கதிர் வீட்டிற்குள் செல்லாமல் வெளியே நின்று சில பொருள்களை எல்லாம் வாங்கி கொடுத்திருக்கேன் என சொல்கிறார். பின் வீட்டில் சாமி புகைப்படம் எதுவும் இல்லை அத்தை புகைப்படம் தான் வைத்திருக்கிறான் அது மட்டுமில்லை உங்க போட்டோ என் போட்டோவை தான் வைத்திருக்கிறான் என சொல்ல, அவன் நம்மை திட்டியதால் தான் இப்படி ஒரு முடிவு எடுத்தான் போல என தனம் சொல்கிறார்.
பின் மூர்த்தியும் தனமும் படுக்க செல்கின்றனர். மறுநாள் காலையில் கதிர் சிக்கிரமாக எழுந்து வேலைக்கு கிளம்புகிறார். அப்போது முல்லை எங்கே வேலைக்கு போறீங்க என கேட்க பஸ் ஏறி போக வேண்டும் சீக்கிரம் கிளம்பினால் தான் முடியும் என சொல்கிறார். முல்லை மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்துவிடுங்கள் என சொல்கிறார். பின் மூர்த்தி வீட்டில் சாப்பிட்டு கொண்டிருக்க அப்போது அடிக்கடி போன் வந்து கொண்டே இருக்கிறது. அதை பார்த்து ஐஸ்வர்யா நான் பேசுகிறேன் என சொல்ல ஆனால் ஸ்டாக் எவ்வளவு வாங்க வேண்டும் என ஐஸ்வர்யாவிற்கு தெரியவில்லை.
TN Job “FB Group” Join Now
ஜீவாவால் ஒரே ஆளாக எல்லா வேலைகளையும் பார்க்க முடியவில்லை என மூர்த்தி கவலைப்பட மீனா அவனும் எவ்வளவு வேலை தான் பார்ப்பான் என கேட்கிறார். ஐஸ்வர்யா அப்போ நீங்க கடைக்கு வாங்க என சொல்ல ஆனால் மீனா என்னால் முடியாது என சொல்கிறார். பின் தனம் முதலில் சாப்பிடுங்க என மூர்த்தியிடம் போனை வாங்கி வைத்துவிட்டு இனி நான் கடைக்கு சென்று வேலைகளை பார்க்கிறேன் என சொல்கிறார். மூர்த்தி குழந்தையை வைத்துக் கொண்டு எப்படி வருவாய் என கேட்க அதெல்லாம் இவங்க இருவரும் பார்த்துக் கொள்வார்கள் என சொல்கிறார்.
பின் ஐஸ்வர்யா அக்காவிற்கு ஏற்கனவே கடையை பார்த்த அனுபவம் இருக்கிறது என சொல்ல மூர்த்தி ஆமாம் இத்தனை நாட்கள் நாங்க வெளியே போவோம் தனம் தான் கடையை பார்த்துக் கொள்வாள் என சொல்கிறார். பின் தனம் குழந்தைகளை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு கடைக்கு வண்டியில் கிளம்புகிறார். மறுபக்கம் கதிர் ஹோட்டல் ஒன்றிற்கு வேலைக்கு வருகிறார். அப்போது ஹோட்டல் முதலாளி ஹோட்டலில் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் சமையல், இலை போடுவது, டேபிள் துடைப்பது என அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என சொல்கிறார். பின் கதிர் ட்ரெஸ் மாற்றிக் கொண்டு வேலைகளை செய்கிறார்.