வரலாற்றில் இன்று முக்கிய நாள்: சர்வதேச கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் சாதனை படைத்த தினம்!!
18 ஆண்டுகளுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய 20 ஓவர் உலக கோப்பை தொடரின் லீக் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்து அசத்தியது. அதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி 200 ரன்கள் மட்டுமே அடித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
செஸ் ஒலிம்பியாட் 2024: தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி.. விவரம் உள்ளே!!
முன்னதாக இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் நட்சித்திர வீரர் யுவராஜ் சிங் 19வது ஓவரில் 6 பந்துகளுக்கு 36 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். மேலும் ஆட்ட நாயகன் விருது வென்றும் அசத்தினார். கிரிக்கெட் வரலாற்றில் யுவராஜ் சிங் சிறந்த மேட்ச் வின்னர்களில் ஒருவர் என்பதிற்கு மாற்று கருத்தே இல்லை. தற்போது இவர் சிறந்து விளங்கிய இத்தினத்தை ரசிகர்கள் நினைவு கூர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.



























