
இயற்கை விவசாயம் செய்பவர்களாக நீங்கள்…? அப்போ இந்த ரூ. 1 லட்சம் உங்களுக்கு தான் ..தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு”…!!
தற்போதைய காலகட்டத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்வதை விட, அதிக லாபம் ஈட்டுவதற்காக செயற்கை முறையில் விவசாயத்தை செய்து வருகிறார்கள். மேலும், இவ்வாறு பல்வேறு செயற்கை உரங்களை பயன்படுத்தி விளைச்சலை மேற்கொள்ளவதால், அதை உட்கொள்பவர்களுக்கு உடலில் பல்வேறு நோய்கள் தென்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர் . இந்நிலையில், தமிழக அரசானது இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதாவது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், “இயற்கை விவசாயம் செய்பவர்களாக நீங்கள்? இது உங்களுக்கான விருது” என்ற தலைப்பில் மாநில அளவில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து சான்றிதழுடன் பரிசு தொகை வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார். மேலும், முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2வது பரிசு ரூ.60,000 மற்றும் 3 வது பரிசு ரூ.40,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தீபாவளிக்கு முன்னரே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு..!! மத்திய அரசு தகவல்..!! முழு விவரம் உள்ளே..!!
மேலும், விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தோட்டக்கலைத் துறை இணையதளமான http://www.tnhorticulture.tn.gov.in என்ற லிங்க் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து, விண்ணப்பித்த படிவத்தை அச்சிட்டு போதிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

























