தமிழக கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்? உயர்கல்வித்துறை விளக்கம்!

0
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்? உயர்கல்வித்துறை விளக்கம்!
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்? உயர்கல்வித்துறை விளக்கம்!
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்? உயர்கல்வித்துறை விளக்கம்!

கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் மற்றும் தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் வழி பாடங்கள்:

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேர்வில்லாமல் தேர்ச்சி பெற்றதாக மாநில அரசு அறிவித்தது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக மட்டுமே பாடங்கள் நடத்தப்படும் என பல்கலைக்கழகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர் கல்வி அதிகாரிகள் தெரிவிக்கும் போது, ‘தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்த மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை.

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை!

அதனால் கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி ஊழியர்கள் மட்டுமே கல்வி நிறுவனங்களுக்கு வந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும். அரசு அனுமதி வழங்கினால் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியாகும். தற்போதுள்ள சூழ்நிலையில் ஆன்லைன் வழியே தேர்வுகளும் நடத்தப்படும்’ என தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!