நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை!
கொரோனா பரவலால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதை தொடர்ந்து, 12 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று (08-04-2021) காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
பிரதமர் ஆலோசனை:
நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 1 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு புதிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொது இடங்களில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு கட்டுப்பாட்டு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படலாம் என்ற அச்சத்தால் பிற மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் பலர் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். முன்னதாக டெல்லி, குஜராத், மும்பை, புனே, ஜார்கண்ட் போன்ற இடங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடைகள், வணிக வளாகங்கள், மால்கள் போன்ற இடங்களில் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகள் – இன்று முதல் தொடக்கம்!!
பொது கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள 12 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு என்னென்ன ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்பது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என தெரிய வந்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்