வெங்காய ஏற்றுமதி தடையை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் – வர்த்தக பாதிப்பு நிலை!
வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்றுமதி தடை:
சமீபகாலமாக நாட்டில் வெங்காயத்தின் விலை பல மடங்கு உயர்ந்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு 2024 மார்ச் 31ம் தேதி வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வெங்காயத்தின் விளைச்சல் அதிகமாக உள்ள நிலையில் மத்திய அரசின் தடை விவசாயிகளை பாதிக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்து நாசிக் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் காரணமாக பல்வேறு வகையிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு, போக்குவரத்து கடுமையாக ஸ்தம்பிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளின் கோரிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கும் அனுமதி அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுவரை சுங்கத்துறை வழியாக வெங்காய ஏற்றுமதிக்கான அனுமதிகள் மறுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வங்கி ஊழியர்களுக்கு வந்த ஜாக்பாட் அறிவிப்பு – 17% சம்பள உயர்வு!
அதிக வெங்காய வரத்து காரணமாக விலை குறைவு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இதன் காரணமாகவே சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டு உள்ளது. சாலை மறியலை வாபஸ் பெறுமாறு காவல்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.