வங்கி ஊழியர்களுக்கு வந்த ஜாக்பாட் அறிவிப்பு – 17% சம்பள உயர்வு!
இந்தியாவின் அனைத்து வங்கிகளுக்கான ஊழியர்களுக்கும் 17 சதவீதம் ஊதிய உயர்வு அளிப்பதற்கு இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஊதிய உயர்வு:
நாட்டில் உள்ள அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களும் மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கவும், அதற்கான பணிகளை ஈடு செய்யும் வகையில் வார நாட்களில் கூடுதல் வேலை நேரத்தை அமல்படுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பான ஒப்புதல் மத்திய அரசிடம் தற்போது பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில் நாட்டின் அனைத்து பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கும் 17 சதவீத ஊதிய உயர்வு அளிப்பதற்கு இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.
மழையால் பெரும் சேதம் – காப்பீடு நிறுவனங்களுக்கு அமைச்சரின் முக்கிய அறிவுறுத்தல்!
இதன் காரணமாக 3.8 லட்சம் வங்கி அதிகாரிகள் உட்பட சுமார் ஒன்பது லட்சம் ஊழியர்களும் பயனடைவார்கள். மேலும் இதற்காக ரூபாய் 1,249 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு ஐந்து ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், உயர்த்தப்பட்ட ஊதிய விகிதமானது 2022 நவம்பர் மாதம் முதல் முன் தேதியிட்டு நடைமுறைக்கு வரும் என்றும், 12 மாதங்களுக்கான நிலுவைத் தொகை வரும் மாத சம்பளத்துடன் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.