மழையால் பெரும் சேதம் – காப்பீடு நிறுவனங்களுக்கு அமைச்சரின் முக்கிய அறிவுறுத்தல்!

0
மழையால் பெரும் சேதம் - காப்பீடு நிறுவனங்களுக்கு அமைச்சரின் முக்கிய அறிவுறுத்தல்!
மழையால் பெரும் சேதம் - காப்பீடு நிறுவனங்களுக்கு அமைச்சரின் முக்கிய அறிவுறுத்தல்!
மழையால் பெரும் சேதம் – காப்பீடு நிறுவனங்களுக்கு அமைச்சரின் முக்கிய அறிவுறுத்தல்!

மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக பல வாகனங்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு காப்பீட்டு நிறுவனங்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

காப்பீடு:

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடைவிடாத தொடர்ந்து பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. பலரும் தங்களது உடைமைகளை இழந்து உதவிக்காக தவித்து வருகின்றனர். மற்றொரு பக்கம் கார் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் திங்கட்கிழமை கல்லூரிகள் திறப்பு – கல்வி இயக்ககம் அறிவிப்பு!!

இந்த நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு காப்பீட்டு நிறுவனங்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். அதாவது அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களுக்கு இந்த நேரத்தில் உதவ முன்வர வேண்டும். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி காப்பீடு நிறுவனங்கள் பொது மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!