திடீரென வங்கி கணக்கிற்கு வந்த ஒரு லட்சம் ரொக்கம் – அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தெலுங்கனா மாநிலத்தில் மக்கள் வங்கி கணக்கில் திடீரென ரூ.10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை டெபாசிட் செய்யப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மக்கள் அதிர்ச்சி
தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரில் உள்ள மக்களின் வங்கி கணக்கில் நேற்று முன்தினம் திடீரென ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை டெபாசிட் செய்யப்பட்டது. இந்த பணம் எஸ்பிஐ வங்கி மட்டுமல்லாமல் அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் டெபாசிட் செய்யப்பட்டது. அதனால் மக்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர். யார் இவ்வளவு பணத்தை டெபாசிட் செய்து இருப்பார் என குழப்பமடைந்தனர்.
அடுத்த 2 ஆண்டுகளில் 1000 புதிய வேலைகளை உருவாக்க திட்டம் – அமைச்சர் அறிவிப்பு!
இந்நிலையில் ஒரு சிலர் பணத்தை எடுத்து பயன்படுத்தினர், சிலர் வேறு வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்தனர். இதே போல ஆந்திராவில் உள்ள திருப்பதி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பொதுமக்கள் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டது. அதனால் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.