அடுத்த 2 ஆண்டுகளில் 1000 புதிய வேலைகளை உருவாக்க திட்டம் – அமைச்சர் அறிவிப்பு!
தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் 1000 புதிய வேலைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய வேலைவாய்ப்பு:
தெலுங்கானா மாநிலத்தில் தொழில்துறையின் வளர்ச்சிக்காக ஏகப்பட்ட திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் சந்தீப் கல்ரா, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பெர்சிஸ்டெண்ட் சிஸ்டம்ஸ் நிர்வாக இயக்குனருடன் தொழில்துறையின் வளர்ச்சி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதாவது, வளர்ச்சி மற்றும் அதிகாரத்தில் தொழில்நுட்பத்தின் பங்கை மையமாக வைத்து வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டது.
தமிழகத்தில் ஆக.30ம் தேதி மின்தடை – ஏரியா இந்த லிஸ்ட் வந்தாச்சு.. உடனே பாருங்க!
அதாவது, தெலுங்கானா மாநிலத்தில் பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் என்னும் உலகளாவிய சேவைகள் டிஜிட்டல் பொறியியல் மற்றும் நிறுவன நவீனமயமாக்கலை வழங்கி வருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் டிஜிட்டல் சேவைகள் மூலமாக 1000 புதிய வேலைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் கேடி ராமராவ் தெரிவித்துள்ளார்.