அரசு ஊழியர்கள் குடும்பத்தோடு பட்டினி போராட்டம் – OPS அமல் கோரிக்கை!
தமிழக அரசின் ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஓய்வூதிய திட்டம்:
நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு செயல்பாட்டில் இருந்து வந்த பழைய ஓய்வூதிய திட்டமானது கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டு ஊழியர்கள் பங்களிக்கும் வகையிலான புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக 2003 ஆம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்து அனைவருக்கும் புதிய ஓய்வூதிய திட்டம் மட்டுமே அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து 20 ஆண்டுகளாக போராட்டங்கள் நடந்து வருகிறது.
‘இவர்களுக்கு’ ஓய்வூதியத்தொகை மிகவும் குறைவு – வெளியான ரிப்போர்ட்!
ஆனால் அரசின் நிதிநிலை சீரமைக்கப்பட்ட பின்னர் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று அரசு தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் வாயிலாக அரசு ஊழியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை அன்று தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Follow our Instagram for more Latest Updates
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருக்கும் திமுக அரசு ஆட்சிக்கு வந்து இத்தனை காலம் ஆகியும் இதனை செயல்படுத்தாமல் இருப்பது சரியானது அல்ல என்று தெரிவித்து, அரசு உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், அதுவரையில் தங்களின் போராட்டங்கள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.