அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் & மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு – மாநில அரசு முடிவு!!
ஒடிசா அரசு தங்களின் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.
ஒடிசா அரசு:
கொரோனா நோய்பரவல் காரணமாக ஒடிசா மாநிலத்தின் கேபினெட் அமைச்சரவை கூட்டம் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் இணைய வழியில் நடந்தது. இந்த இணைய வழி கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அதிலும் தமிழகத்தை போலவே மாநில அரசின் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் மருத்துவப்படிப்பில் சேருவதற்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டது.
இன்ஜினீயரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் – தேதி அறிவிப்பு!!
மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர்:
மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் எஸ்.ஆர்.தாஸ் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில், “அடுத்த கல்வி ஆண்டு முதல் மாநில அரசு நடத்தி வரும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படும். மாணவர்களின் பொருளாதாரம் இட ஒதுக்கீட்டிற்கான அளவுகோலாக இருக்காது” என்று கூறியுள்ளார்.
2021 ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை – RBI அறிவிப்பு!!
இந்த பணிக்காக உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு ஒன்று அறிக்கையை தயார் செய்து 3 மாதத்திற்குள் மாநில அரசிடம் ஒப்படைக்கும் எனவும் கூறியுள்ளார். இட ஒதுக்கீடு எத்தனை சதவீதம் என்பது இன்னும் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்