அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவு பொருள்கள் – மாநில முதல்வர் அறிவிப்பு!!
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு மதிய உணவிற்கு பதிலாக உலர் உணவு பொருள்களை வழங்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.
உலர் உணவுகள் வழங்கும் திட்டம்:
கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. நோய் தாக்கம் குறைந்து வரும் நேரத்திலும் உரிய சூழ்நிலை இல்லாத காரணத்தால் பள்ளிகள் திறப்பது தாமதமாகிறது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்கள் கற்று வருகின்றனர். இதனால் அரசின் இலவச மதிய உணவை நம்பி உள்ள மாணவர்களுக்கு உணவு தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு டெல்லி அரசு மாணவர்களுக்கு உலர் உணவுகள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!
இது குறித்து அந்த மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால், மதிய உணவுக்கான பணத்தைப் பெற்றோர்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்ப முடிவு செய்தோம். ஆனால், தற்போது 6 மாதங்களுக்கு மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க முடிவு செய்துள்ளோம். குழந்தைகளுக்கு உரிய ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்வதில் டெல்லி அரசு உறுதியாக உள்ளது” என்று தெரிவித்தார்.
அரசு துறைகளில் பட்டியலின காலிப்பணியிடங்கள் குறித்த வழக்கு – தமிழக அரசிற்கு நோட்டீஸ்!!
நோய் பரவல் ஒருபக்கம் இருந்தாலும் சில மாநிலங்களில் மட்டும் அக்டோபர் 15-ம் தேதிக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடந்து வருகின்றன. டெல்லியில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த பின் தான் பள்ளிகள் திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |