பல்கலைக்கழக இறுதி தேர்வுகளை அக்டோபர் 10 வரை நடத்த கோரிக்கை
கொரோனா வைரஸ் பரவலினால் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்து தேர்ச்கி பெற்றதாக அறிவித்து மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் யுஜிசி ஆனது இறுதி பருவ தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதனால் இறுதி பருவ தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்று தெரிகிறது. மேலும் அந்த தேர்வுகளை வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி அன்றுக்குள் நடத்தி முடித்துவிட வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் தற்போது ஒடிஷா மாநில உயர் கல்வித்துறை ஆனது பல்கலைக்கழக இறுதி தேர்வுகளை அக்டோபர் 10 வரை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை கடிதத்தை அனுப்பி உள்ளது. மேலும் ஒரு நாள் விட்டு ஒரு நாளாக தேர்வினை நடத்தவும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக வகுப்பறைகள் முழுவதிற்கும் கிருமி நாசினி தெளிக்கப்படும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஏற்கனவே மகாராஷ்டிரா மாநில அரசு அக்டோபர் முதல் வாரத்தில் தேர்வுகளை நடத்த இருப்பதாக அறிவிதத்து உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்