தமிழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்லை – ஷாக் அறிவிப்பு!
தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
தமிழக அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட துறை சார்ந்த ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுகள் தனித்தனியாக அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் போக்குவரத்து துறை சார்ந்த ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து சங்க நிர்வாகிகள் தமிழக அரசிடம் இதற்கு முன்னர் நடந்த பேச்சுவார்த்தையின் போது கோரிக்கை வைத்தனர். அப்போது தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அகவிலைப்படி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை செயலர் உறுதியளித்திருந்தார். இந்நிலையில் நவம்பர் 10ம் தேதி அன்று போக்குவரத்து சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு பள்ளிகளில் 154 காலிப்பணியிடங்கள்.. ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு வாய்ப்பு – முழு விவரம் உள்ளே!
அதில் அகவிலைப்படி உயர்வு வழங்க நிதித்துறையிடம் ஒப்புதல் கேட்கப்பட்டதாகவும் நிதித்துறை ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்ட காரணத்தினால் போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அமல்படுத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை செயலர் கூறியுள்ளார். இந்நிலையில் அகவிலைப் படி உயர்வு குறித்த பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து போக்குவரத்து துறை சார்ந்த 16 சங்கங்கள் ஒன்றிணைந்து மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அகவிலைப்படி உயர்வு குறித்த அரசின் நடவடிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.