தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கவனத்திற்கு – ஈடுசெய் விடுப்பு விளக்கம்!
அரசால் விடுமுறை நாட்களில் நடத்தப்படும் NMMS, NTSE உள்ளிட்ட அரசுத் தேர்வுகளுக்கு செல்லும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அன்றைய நாளை பணி நாளாக கருதி ஈடு செய் விடுப்பு வழங்குவது குறித்து கோரப்பட்ட மனுவிற்கு RTI பதில் அளித்துள்ளது.
RTI பதில்:
தமிழகத்தில் அரசு சார்பில் பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதாவது மாணவர்களது கல்வித் திறன்களை மேம்படுத்த மற்றும் வெளிக்கொணரும் வகையில் NMMS, NTSE உள்ளிட்ட தேர்வுகள் அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய அரசுத் தேர்வுகளுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வுப்பணிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த தேர்வுகள் விடுமுறை நாளான ஞாயிற்று கிழமைகளில் மட்டுமே நடைபெறும்.
EPFO அக்கவுண்ட் பேலன்சை அறிந்து கொள்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
அவ்வாறு அரசு விடுமுறை நாளன்று தேர்வு பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கு அன்றய தினத்தை பணிநாளாக கருதி ஈடுசெய் விடுப்பு வழங்கலாமா என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மனு அனுப்பியுள்ளார். அத்தகைய மனுவிற்கு RTI பதில் மனு அனுப்பியுள்ளது. அத்தகைய மனுவில் ஒரு அரசு அலுவலர் அல்லது ஆசிரியர் துறைத்தேர்வு எழுத செல்லும் நாளை பணி நாளாக கருத அரசு விதிகளில் இடம் உள்ளது.
சென்னை: மீண்டும் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி! இன்றைய நிலவரம்!
அதே விதியில் ஒரு குறிப்பிட்ட தேர்வுக்கு அதிகபட்சம் 2 முறைக்கு மேல் பணிக்காலமாக கருதி அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் RTI தெரிவித்துள்ளது. மேலும் அரசால் விடுமுறை நாட்களில் நடத்தப்படும் NMMS, NTSE உள்ளிட்ட எந்த தேர்வுகளுக்கு தேர்வு பணிக்கு செல்லும் அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு அன்றைய தினம் பணிநாளாக கருதி அனுமதி வழங்க விதியில் இடம் இல்லை என்று RTI பதில் அளித்துள்ளது. எனவே அரசு தேர்வுகளுக்கு செல்லும் நாளை முன்னிட்டு ஈடுசெய் விடுப்பு வழங்க இயலாது என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.