சென்னை: மீண்டும் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி! இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. தினசரி ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரிப்பதால் நகைப்பிரியர்கள் மிகுத்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தங்கத்தின் விலை:
நாடு முழுவதும் பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்து வருவதாலும், மக்கள் தங்க ஆபரணங்கள் மீது அதிக ஈடுபாடு காட்டுவதாலும் அதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கொரோனா பரவலை தொடர்ந்து அதிகரித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலையானது நவம்பர் மாதம் தொடங்கியதும் சற்று குறையத் தொடங்கியது. அவ்வாறு விலை குறைந்து காணப்பட்டதால் மக்கள் தங்க ஆபரணங்கள் வாங்க சற்று ஆர்வம் காட்டி வந்தனர்.
தமிழகத்திற்கு நவ.29 வரை ரெட் அலர்ட், 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை எச்சரிக்கை!
கடந்த சில நாட்களாக குறைந்து காணப்பட்ட தங்கத்தின் விலையானது மீண்டும் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. அதனால் சாமானிய மக்கள் தங்கம் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டது. ஏனெனில் தங்க ஆபரணம் என்பது இன்றைய காலத்தில் அனைவரும் விரும்பக்கூடிய ஒரு பொருளாக மாறியுள்ளது. அவ்வாறு விரும்பினாலும் வாங்க முடியாத அளவிற்கு தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று சென்னையில் 1 கிராம் ரூ.4,496 க்கும், 1 சவரன் ரூ.35,968க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Post Office அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அந்த வகையில் இன்று நவ.26ம் தேதி நிலவரப்படி சென்னையில் தங்கத்தின் விலை கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்து ரூ.4,503 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சவரனுக்கு ரூ.56 ரூபாய் அதிகரித்து ரூ.36,024 க்கும் செய்யப்படுகிறது. மேலும் தூய தங்கத்தின் விலை 1 கிராம் நேற்று ரூ.4,860க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.7 அதிகரித்து ரூ.4,867க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் தூய தங்கத்தின் விலை 1 சவரன் ரூ.38,880க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.56 அதிகரித்து ரூ.38,936க்கு விற்பனை செய்யப்படுகிறது.