இந்தியாவில் தீவிரமெடுக்கும் நிபா வைரஸ் – முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்!
இந்தியாவில் நிபா வைரஸ் உறுதி தொற்றால் இருவர் உயிரிழந்ததை அடுத்து நாடு முழுவதும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
நிபா வைரஸ்:
கேரள மாநிலத்தில் நிபா எனும் புதிய வகை வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அம்மாநிலத்தில் 2 பேர் வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருவரும் உயிரிழந்தனர். இறந்தவர்களின் மாதிரிகள் பூனேவில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதில் உயிரிழந்த நபருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் தடுப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
வங்கி பணிக்கான போட்டித்தேர்வு – வெற்றி பெற அருமையான சான்ஸ்..Join Online Class!
இது தொடர்பாக பேசிய புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரியில் நிபா வைரஸ் தொற்றை தடுக்கும் பணிகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. இதுவரை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. அதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்று தெரிவித்துள்ளார்.