7 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு? முதலமைச்சர் தகவல்!!

0
7 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு? முதலமைச்சர் தகவல்!!
7 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு? முதலமைச்சர் தகவல்!!
7 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு? முதலமைச்சர் தகவல்!!

கர்நாடகா மாநிலத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் இரவு நேர ஊரடங்கு 20 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

இரவு நேர ஊரடங்கு:

நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று ஒரு நாள் மட்டும் புதிதாக 2.17 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே போல பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

TN Job “FB  Group” Join Now

கர்நாடகாவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 13,046 பேர் பலியாகியுள்ளனர். முன்னதாக பல மாநிலங்களில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தின் 8 மாவட்டங்களில் ஏப்ரல் 10 முதல் 20 ஆம் வரை இரவுநேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து வெளியேறும் சிட்டி வங்கி – சேவையில் பாதிப்பு இல்லை!!

இந்த இரவுநேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து மாநில முதல்வர் எடியூரப்பா தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ’20ஆம் தேதிக்கு பிறகு இரவுநேர ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!