தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

0
தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் வெப்பம் சற்று தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் தற்போது வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு தினங்களுக்கு (16.04.2021, 17.04.2021) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

TN Job “FB  Group” Join Now

17.04.2021 முதல் 19.04.2021:

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு? தலைமை செயலர் முக்கிய ஆலோசனை!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவாக தூத்துக்குடியில் 9 செ.மீ மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்காக எச்சரிக்கை:

16.04.2021: தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தபடுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!