தமிழகத்தில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு? தலைமை செயலர் முக்கிய ஆலோசனை!
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த 10 நாட்களாக கட்டுக்கடங்காத நிலையில் பரவி வருகிறது. இதனால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அரசு பல கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. கொரோனா முதல் அலை பரவல் கடந்த 2020 மார்ச் மாதம் தொடங்கியது. நோய்பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு முறை அமல்படுத்தப்பட்டது. 2020ம் ஆண்டு இறுதியில் நோய் கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் தங்கள் பணிக்கு திரும்ப தொடங்கினர்.
இந்தியாவில் ஒரே நாளில் 2.17 லட்சம் பேருக்கு கொரோனா – 1185 பேர் பலி!!
இரண்டாம் அலை:
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதனால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. பின்னர் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுவதும் பரவி வந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் வேகமாக கொரோனா தொற்று பரவி வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் விடுமுறை அளிக்கப்பட்டது.
ஊரடங்கு ஆலோனை:
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் ஒரே நாளில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கையும் இதுவரை இல்லாத அளவில் அதிகரித்து உள்ளது. இதனால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அல்லது வார இறுதி நாள் ஊரடங்கு முறையை அமல்படுத்துவது குறித்து தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் தலைமையில் உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்