ஜப்பானில் அரசின் நூதன திட்டம் – குழந்தை பெற்றால் ரூ.3 லட்சம் உதவித்தொகை!
ஜப்பானில் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது. அந் நாட்டில் முதியவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிகிறது.இந்த நிலையில் மக்கள் தொகை உயர்த்த ஜப்பான் அரசு உதவித்தொகை திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
உதவித்தொகை:
கடந்த 11 ஆண்டுகளாகவே ஜப்பானில் மக்கள் தொகை சரிந்து வருகிறது. தற்போது 60க்கும் மேற்பட்ட வயதுடைய நபர்களின் எண்ணிக்கை மட்டுமே அதிகமாக உள்ளதாக தரவுகள் தெரிவிக்கிறது. உலக நாடுகளைப் பொறுத்தவரை ஜப்பான் ஒரு வல்லரசு நாடாக உள்ளது. ஆனால் அந்நாடு மக்கள் தொகையில் பின்தங்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
பொருளாதார நிலை, உறுதியற்ற வேலைவாய்ப்பு போன்றவற்றின் விளைவாக ஜப்பான் நாட்டு மக்கள் குழந்தை பெற்று கொள்வதில் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மக்கள் தொகை எண்ணிக்கையை உயர்த்த ஜப்பான் அரசு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு? அகவிலைப்படி மீண்டும் உயர்வு.. வெளியான சூப்பர் தகவல்!
Exams Daily Mobile App Download
அதாவது அந்நாட்டில் புதிதாக குழந்தை பெறும் தம்பதியருக்கு ரூபாய் 3 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என்று அந்நாட்டு நிதி மந்திரி தெரிவித்துள்ளார். இது போன்ற உதவித்தொகை திட்டத்தை ஏற்கனவே சீன அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பின்லாந்து, எஸ்தோனியா, இத்தாலி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் குழந்தை பெறுவதை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.