மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு? அகவிலைப்படி மீண்டும் உயர்வு.. வெளியான சூப்பர் தகவல்!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வரவிருக்கும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பரிசாக அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தகவல்கள் வந்துள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சி உள்ளனர்.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அதிகரிக்கும் விலைவாசியை கருத்தில் கொண்டு அகவிலைப்படி ஆண்டுதோறும் இரண்டு முறை உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு முதல் கட்டமாக ஜனவரி மாதம் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 38% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையும் ஊழியர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்கும் திட்டம் அரசுக்கு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ரயில் பயணத்தில் பயணிகளுக்கு இனி இந்த பிரச்சனை இல்லை – IRCTC ன் புதிய அறிமுகம்!
Exams Daily Mobile App Download
இதனால் ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நேரத்தில் புத்தாண்டு பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஊழியர்களுக்கு அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வந்துள்ளது.இந்த அகவிலைப்படி 3 முதல் 4 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் ஊழியர்களின் அகவிலைப்படி 42% ஆக உயரும்.