புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை குறித்த முக்கிய உத்தரவு – தேர்தல் ஆணையம் வெளியீடு!!
நாட்டு மக்களுக்கு தேவையான ஆவணங்களில் ஒன்றாக வாக்காளர் அட்டை இருக்கிறது. இந்நிலையில், புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் அட்டை:
இந்தியாவில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என சட்டம் இருக்கிறது. அதற்காக முக்கிய ஆவணமாக வாக்காளர் அட்டை இருக்கிறது. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களிடம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார். அதில் வாக்காளர் அட்டையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு கடந்த 5 ஆம் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது வரை 10.17 லட்சம் புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்ந்து இருக்கின்றனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 2.15 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். மேலும் மொத்தமாக 12.32 லட்சம் பேருக்கு புதிதாக வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிக்க 2 மாதங்கள் ஆகும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பலர் விண்ணப்பித்துள்ள நிலையில் அதில் இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள புதிய வாக்காளர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் உச்சம் தொடும் தங்கத்தின் விலை…! இனி வாங்குறது ரொம்ப கஷ்டம்…!
அது மட்டுமில்லாமல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் நம்பரை இணைக்க விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதுவரை 63.17 சதவீத வாக்காளர்களிடம் இருந்து ஆதார் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 3.91 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.