தமிழக பள்ளிகளில் புதிய மாற்றம் – வெளியானது அரசின் முக்கிய அறிவிப்பு!

0
தமிழக பள்ளிகளில் புதிய மாற்றம் - வெளியானது அரசின் முக்கிய அறிவிப்பு!
தமிழக பள்ளிகளில் புதிய மாற்றம் - வெளியானது அரசின் முக்கிய அறிவிப்பு!
தமிழக பள்ளிகளில் புதிய மாற்றம் – வெளியானது அரசின் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டியின் அளவு மற்றும் நேரம் ஆகியவற்றை சத்துணவு பணியாளர்கள் கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை சிற்றுண்டி திட்டம்:

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. மேலும், ஒவ்வொரு மாதமும் இந்த காலை சிற்றுண்டி திட்டம் பல்வேறு பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், பள்ளி மாணவர்களுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகளைக் கொண்டு சுத்தமான முறையில் உணவினை தயாரிக்கும்படி சத்துணவு ஆய்வாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மேலும், தற்போது ஒவ்வொரு மாணவர்களுக்கும் எவ்வளவு உணவு வழங்கப்படுகிறது மற்றும் உணவு பரிமாறும் நேரம் குறித்த அனைத்து விவரங்களையும் கைபேசி செயலியில் பணியாளர்கள் பதிவு செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சத்துணவு பணியாளர்கள் சமையல் தொடங்குவதை காலை 6:00 மணிக்குள் பதிவேற்றம் செய்யும்படியும், காலை 8.15 மணிக்குள் சமையல் செய்து முடிந்ததை பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.

வளைகாப்பில் சண்டை போட்ட கோபி.. கம்பி எண்ண வைத்த பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!

காலை 9 மணிக்குள் மாணவர்களுக்கு உணவு பரிமாறுவதை பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் எனவும், காலை 11 மணிக்குள் எத்தனை மாணவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது என்பது குறித்தான எண்ணிக்கையை பதிவு செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!