மாணவர்களுக்கான கல்வி கடன்தொகை ரூ. 5 லட்சமாக உயர்வு – அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
சிறுபான்மையின மாணவர்களுக்கான கடன் தொகையை உயர்த்துவது ஆலோசிக்கப்பட்டு வருவதாக மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
கடன் தொகை:
கர்நாடக மாநிலத்தில் கேஎம்டிசி என்னும் மாநில சிறுபான்மையினர் வளர்ச்சி ஆணையம் சார்பாக எம் பி பி எஸ் படிக்கும் மாணவர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அம்மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்துள்ளார். அதவாது சிறுபான்மையின மாணவர்களுக்கான கடன் தொகையை ரூ. 5 லட்சமாக உயர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தமிழக பள்ளிகளில் புதிய மாற்றம் – வெளியானது அரசின் முக்கிய அறிவிப்பு!
அத்துடன் வெளிநாடுகளில் பயிலும் சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை 20 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக உயர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பெறுவார்கள் என்று தெரிவித்தார்.