வளைகாப்பில் சண்டை போட்ட கோபி.. கம்பி எண்ண வைத்த பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா குடும்பத்தில் அடுத்து ஒரு விசேஷம் வர இருக்கும் நிலையில், அதில் குடித்துவிட்டு கோபி தகராறு செய்ய இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாக்கியா குடும்பத்தையும் படிப்பையும் ஒன்றாக பார்க்க முடியாமல் இருக்க, அதனால் இங்கிலிஷ் வகுப்பை முடித்துக் கொள்ள முடிவு செய்கிறார். ஆசை பட்டு சேர்ந்த படிப்பை குடும்பத்திற்காக விட்டதை நினைத்து மன வேதனையும் அடைகிறார். அப்போது பாக்கியாவிற்கு துணையாக பழனி இருக்கிறார். அது கோபிக்கு பிடிக்காமல் இருக்கிறது. மறுபக்கம் ஜெனிக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்கின்றனர்.
தமிழக அஞ்சல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.6000 உதவித்தொகை – உடனே விண்ணப்பிக்கவும்!
வளைகாப்பில் பழனி மீது உள்ள கோவத்தை கோபி காட்ட இருக்கிறார். ஜெனி சொந்தங்கள் எல்லாரும் வந்திருக்கும் போது, கோபி குடித்துவிட்டு வந்து பாக்கியாவை கேவலமாக பேசுகிறார். பொறுமை இழந்த பாக்கியா போலீஸில் புகார் அளிக்கிறார். உடனே கோபியை போலீசார் கைது செய்கின்றனர். இந்த விஷயம் தெரிந்து ராதிகா என்ன செய்வார் என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.