தனியாக வசிக்கும் பெண்களுக்கு புதிய ரேஷன் கார்டு – தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் கணவனால் கைவிடப்பட்ட மற்றும் தனியாக வசிக்கும் பெண்களுக்கு எந்த வித ஆவணமும் சான்றாக வழங்கப்படாமல் புதிய ரேஷன் கார்டு வழங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
புதிய ரேஷன் கார்டு:
தமிழக ரேஷன் அட்டைகளை புதிதாக பெறுவதற்கு முன்னதாக நமது பெயர் இருந்த ரேஷன் அட்டையில் இருந்து பெயரை நீக்கியதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். அதனை ஆய்வு செய்த பின்னர் தான் புதிய ரேஷன் கார்டு வழங்குவதற்கான நடைமுறைகள் தொடங்கப்படும். கணவனால் கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசிக்கும் பெண்களின் பெயர் கணவனின் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ளது. அப்பெண்களின் கணவன்மார்கள் அவர்களது பெயர்களை நீக்குவதற்கு முன்வருவதில்லை. அதேபோல், நீதிமன்ற விவாகரத்து சான்று போன்ற ஆவணங்கள் இல்லாத காரணத்தினாலும், சம்பந்தப்பட்ட பெண்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவதில் சிக்கல் உள்ளது.
தமிழகத்தில் ஓரிட சேவை மையத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு! நவ.15 கடைசி நாள்!
இது போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆவணங்கள் இல்லாமல் புதிய ரேஷன் கார்டு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அப்பெண்களின் உணவு நிலை பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்நிலை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இது குறித்த அறிக்கையில், தனியாக வசித்துவரும் பெண் மற்றும்ம் அவரை சார்ந்துள்ள குழந்தைகளின் ஆதார் எண் கணவர் வைத்திருக்கும் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை தணிக்கை மூலம் உறுதி செய்ய வேண்டும்.
Airtel & VI பயனர்களுக்கு சூப்பர் திட்டம் – T20 உலகக்கோப்பை போட்டிகள் சலுகை!
இது தொடர்பாக, எழுத்து மூலமான வாக்குமூலம் பெற்று, சம்மந்தப்பட்ட அலுவலர் தனது அதிகார வரம்பினை பயன்படுத்தி, குடும்பத்தலைவரின் அனுமதியில்லாமல் சம்மந்தப்பட்ட பெண்ணின் பெயரினை குடும்ப அட்டையிலிருந்து நீக்கலாம். மேலும், இவர்களிடம் நீதிமன்ற விவாகரத்துச் சான்று போன்ற ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்க வலியுறுத்தாமல் புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.