தமிழக MLA விடுதி குறித்த புதிய உத்தரவு – அரசு வெளியீடு!

0
தமிழக MLA விடுதி குறித்த புதிய உத்தரவு - அரசு வெளியீடு!
தமிழக MLA விடுதி குறித்த புதிய உத்தரவு - அரசு வெளியீடு!
தமிழக MLA விடுதி குறித்த புதிய உத்தரவு – அரசு வெளியீடு!

தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களின் விடுதி வளாகத்தில் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு உத்தரவுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

அரசு உத்தரவு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்களின் விடுதி வளாகத்தில் கடைபிடிக்க வேண்டிய சில நடவடிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி விடுதி வளாகத்தில் பொது கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல பணியாளர்கள் தங்க அனுமதி இல்லை எனவும், உணவு சமைத்து கொள்வதற்கு அனுமதி இல்லை எனவும் பல்வேறு உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.

திருப்பதி எழுமையான் கோவிலுக்கு வர புதிய கட்டுப்பாடு.. இனி இந்த வாகனம் மட்டும் அனுமதி – தேவஸ்தானம் அதிரடி!

இது குறித்த உத்தரவுகளை பொதுத்துறை செயலர் டி.ஜகந்நாதன் பிறப்பித்துள்ளார். மேலும் அதில் சென்னை சேப்பாக்கத்தில் கலைவாணா் அரங்கத்தை ஒட்டி சட்டப் பேரவை உறுப்பினா்கள் மற்றும் முன்னாள் உறுப்பினா்களுக்கான விடுதிகள் இயங்கி வருகின்றன. அதில் சென்னைக்கு வரும் உறுப்பினர்கள் தங்கி கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் முன்னாள் உறுப்பினா்களுக்காகவும் தனியாக விடுதி செயல்பட்டு வருகிறது.

அதற்கு ஒரு நாளைக்கு ரூ. 300 வாடகை வசூலிக்கப்படுகிறது. மேலும் முன்னாள் உறுப்பினர்கள் ஒரு மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே விடுதியில் தங்கி கொள்ள முடியும். ஏதேனும் அரசு விழாக்களுக்கு முன்னாள் உறுப்பினா்கள் அழைக்கப்பட்டிருந்தால் அவா்கள் இரண்டு நாள்கள் வரை விடுதியில் கட்டணம் ஏதுமின்றி தங்கிக் கொள்ளலாம். விடுதிக் கட்டணங்கள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் மற்றும் முன்னாள் உறுப்பினா்களின் மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் இருந்து கழித்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!