அங்கன்வாடிக்கு வந்த புதிய உத்தரவு .. இனி ஜாலி தான் – அரசின் புதிய ஏற்பாடுகள்!
அங்கன்வாடியில் மூன்று முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு செலவிடப்படும் தொகையானது உயர்த்தப்பட்டு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி குழந்தைகள்
ஒன்றாம் வகுப்புக்கு முந்தைய பள்ளி அனுபவங்களுக்காக மற்றும் சத்துணவு திட்டத்தில் மூன்று முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்காக அங்கன்வாடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கேரளா மாநிலத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் பலன்களில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடியில் ஒரு குழந்தைக்கு செலவிடப்படும் ஒருநாள் தொகை ரூ. இரண்டிலிருந்து ரூ. ஐந்தாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் சரக்குகளை விநியோகிப்பதற்கு ஒரு கிலோவிற்கு அனுமதிக்கப்பட்ட போக்குவரத்து செலவு 15 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட 50 பைசாவிலிருந்து தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
கடனை செலுத்தவில்லையா? இனி கவலை வேண்டாம்!! ரிசர்வ் வங்கியின் அதிரடி திட்டம்!!
தற்போதைய விலை ஏற்றம் மற்றும் போக்குவரத்து செலவுகள் உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் மொத்தம் 33,115 அங்கன்வாடி மையங்கள் உள்ளது. இதில் 3,28,157 3 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இவர்களுக்கு காலையில் லேசான சிற்றுண்டி, மதியம் 12:30 மணிக்கு கஞ்சி, பருப்பு அல்லது சாதம், மாலையில் உப்புமா அல்லது பயறு வகைகள், வாரத்தில் இரண்டு முறை பால் மற்றும் முட்டை ஆகியவை வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் இந்த புதிய ஏற்பாடுகள் மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.