Constable தேர்வு நடைமுறையில் புதிய மாற்றம்? உள்துறை அமைச்சர் விளக்கம்!

0
Constable தேர்வு நடைமுறையில் புதிய மாற்றம்? உள்துறை அமைச்சர் விளக்கம்!
Constable தேர்வு நடைமுறையில் புதிய மாற்றம்? உள்துறை அமைச்சர் விளக்கம்!
Constable தேர்வு நடைமுறையில் புதிய மாற்றம்? உள்துறை அமைச்சர் விளக்கம்!

கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பு கருதி வீடுகளிலேயே இருந்தாலும், கொரோனா மேலும் பரவாமல் இருக்க காவல்துறை ஊழியர்கள் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக மக்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலிப் வால்ஸ் பாட்டீல் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முக்கிய அறிவிப்பு:

காவல்துறையில் பணிபுரிய வேண்டும் என்பது பலரின் கனவு. இதற்காக பல மாநிலங்களில் உள்ள இளைஞர்கள், காக்கிச் சட்டையை எப்படியாவது போட்டே தீருவேன் என்ற உறுதியோடு, நாள்தோறும் தங்களை உடல் ரீதியாகயும், படிப்பு ரீதியாகவும் தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிரா இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலிப் வால்ஸ் பாட்டீல் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, மாநிலத்தில் 7,231 போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையில், எழுத்துத் தேர்வுகளுக்கு முன்னதாக உடற்தகுதி தேர்வு தொடங்கும் என்று கூறினார்.

Exams Daily Mobile App Download

இந்த புதிய விதி மூலமாக கிராமப்புறங்களில் இருந்து அதிக இளைஞர்கள் காவல்துறையில் சேருவதற்கு அதிக வாய்ப்பளிக்கும் என்று நம்பப்படுகிறது. முன்னதாக, போலீஸ் பதவிகளுக்குத் தகுதி பெற உடல்நிலைத் தேர்வுகளை எடுப்பதற்கு முன்பு ஒருவர், முதலில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதுவே நடைமுறை வழக்கமாக இருந்தது வந்தது. இதைத்தான் இதுவரை பின்பற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது குறித்து 2020 முதல் 7,231 காலியாக உள்ள போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் நாளை (ஜூலை 1) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மேலும் தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்துள்ளோம். அதாவது முதலில் உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டு, பின்னர் எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என கூறினார். இது காவல் துறைக்கு வலுவான காவலர்களைப் பெறவும், கிராமப்புற மாணவர்கள் வாய்ப்பைப் பெறவும் உதவும். மேலும், உடல் தேர்வுக்கு, 50 மதிப்பெண்கள் இருக்கும். எழுத்துத் தேர்வில், பல தேர்வு கேள்விகள் இருக்கும், அது மராத்தியில் நடத்தப்படும். எழுத்துத் தேர்வு 90 நிமிட கால அளவு கொண்டதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!