மெட்ரோ ரயில் பயணிகளுக்கு புதிய வசதி – இனி பயணம் ரொம்ப ஈஸி!
மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக மின்சார ஆட்டோ மற்றும் மினி பஸ் சேவைகள் துவங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின்சார ஆட்டோ:
போக்குவரத்து நெரிசல் காரணத்தினால் அதிகளவிலான பயணிகள் தற்போது மெட்ரோ ரயிலில் தான் பயணம் செய்ய விரும்புகின்றன. தமிழகத்தில் நாளொன்றுக்கு மட்டுமே இலட்சக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரயிலை பயன்படுத்துவதாக சமீபத்தில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில், மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக மின்சார ஆட்டோ மற்றும் மினி பஸ் சேவைகள் துவங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க விரையுங்கள் – இன்றே கடைசி நாள்!
அதாவது, சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் சுற்றளவு தூரத்தில் மின்சார ஆட்டோ சேவைகள் துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மின்சார ஆட்டோவில் பயணம் செய்வதற்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூபாய் 20 கட்டணமாக வசூல் செய்யப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் திருமங்கலம் மெட்ரோ முதல் கொரட்டூர், செனாய் நகர் முதல் தியாகராஜ நகர் ஆகிய பகுதிகளுக்கு இடையே மினி பஸ் சேவைகளும் துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.