SAMSUNG கேலக்சி மொபைல் பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்கான எச்சரிக்கை!!
SAMSUNG கேலக்சி மொபைலில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும், மொபைல் ஹேக் செய்யபடுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
SAMSUNG:
SAMSUNG கேலக்சி மொபைல்களை பயன்படுத்துவோருக்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக மத்திய அரசின் கணினித்துறை CERT எச்சரித்துள்ளது. இதனால், சாம்சங் கேலக்சி பயன்படுத்தும் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் ஹேக் செய்யப்படுகிறது. அதனை வைத்து மிரட்டல் விடுக்க வாய்ப்புள்ளதால் உடனடியாக மொபைல் ஆப்பிரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
புது ரேஷன் கார்டு.. அரசின் பிளான் என்ன? – யாருக்கெல்லாம் கிடைக்கும்!
மேலும், பல்வேறு பயனர்கள் மொபைலை ஓபன் செய்வதற்கு சரியான பின் நம்பரை போட்டும் கூட லாக்கை எடுக்க முடியவில்லை. இது போக மொபைல் போன்களில் இருக்கும் முக்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அழிக்கப்படுவதாகவும் புகார் எழுப்பப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து தப்பிப்பதற்கு உடனடியாக பயனர்கள் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்து கொள்ளவும்.