நேபாள நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 192 ஆக உயர்வு.. மக்கள் பரிதவிப்பு!!
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்கும் நேபாளம் அடிக்கடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக நேபாளத் தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டது.
இதில் சிக்கி நேற்று (செப்டம்பர் 29) வரை 170 பேர் பலியான நிலையில் இன்று பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 192- திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து 3 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலரை காணாததால் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


























