நீட் தேர்வு 2021 – திண்டுக்கல் மாவட்டத்தில் மையம்! மாணவர்கள் நிம்மதி!
நாடு முழுவதும் செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து நடப்பாண்டில் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்வு மையம் அமைய உள்ளதாக கூறப்படுகிறது.
நீட் தேர்வு:
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான சீட்டுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. நீட் தேர்வு குறித்து பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையில் தேர்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
தமிழக ஆரம்ப சுகாதார நிலைய பிசியோதெரபிஸ்ட் காலிப்பணியிடங்கள் – செப். 3 நேர்காணல்!
நடப்பாண்டில் 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்ந்து 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறை தேர்வு அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து வந்தனர். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு ஜூலை 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்தன.
TN Job “FB Group” Join Now
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 125 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு 109 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் 51 பேர் தேர்வு எழுதினர். நடப்பாண்டில் செப்டம்பர் 12ம் தேதி தேர்வு நடைபெறும் எனவும் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நீட் தேர்வு மையம் கூடுதல் இடங்களில் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து முதல் முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.