தமிழக ஆரம்ப சுகாதார நிலைய பிசியோதெரபிஸ்ட் காலிப்பணியிடங்கள் – செப். 3 நேர்காணல்!
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தென்காசி மாவட்டம், வடகரை கீழ்பிடாகை மற்றும் சொக்கம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பிசியோதெரபிஸ்ட் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
மருத்துவ காலிப்பணியிடங்கள்:
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல பாதிப்புகள் ஏற்பட்டது. இதனை தடுக்க அரசு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இதனால் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. கொரோனா பரவல் அதிகமாக இருந்த சமயத்தில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லாமலும், மருத்துவ வசதி கிடைக்காமலும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இனி வாரத்தில் 3 மணிநேரம் மட்டுமே வீடியோ கேம் – இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்!
அதனால் அரசு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. தென்காசி மாவட்டம், வடகரை கீழ்பிடாகை மற்றும் சொக்கம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
பிசியோதெரபிஸ்ட் பட்டயப் படிப்பு முடித்த தகுதியுடைய நபர்கள் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்களுடன் தென்காசி ரயில் நிலையம் அருகில் ரயில்வே பீடர் ரோட்டில் அமைந்துள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் வருகிற செப்.3 ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.