நீட் தேர்வு ஒத்திவைப்பு !!!!
தேசிய தேர்வு முகமை NTA தகவலின் படி, சுமார் 15.93 லட்சம் மாணவர்கள் NEET UG 2020 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். மருத்துவப்படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கான ஹால் டிக்கெட் மார்ச் 27 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், தேர்வு முடிவுகள் ஜூன் இறுதியில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸுக்கு 70 வகை மருந்தா..? இந்திய ஆராய்ச்சியாளர்கள் தகவல்..!
கரோனோ தொற்று பாதிப்பு காரணமாக நாடெங்கும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மே 3-ம் தேதி நடக்கவிருந்த நீட் மருத்துவ நுழைவுத்தேர்வை மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் நாடெங்கும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதும் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வை நடத்துவது இயலாத காரியம் என்பதாலும், பிளஸ்டூ தேர்வு நடத்தி அதன் பின்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்டப் பின்னரே அது நடத்த முடியும் என்பதாலும் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
1508 டெக்னீசியன்கள் & 1000 செவிலியர் காலிப்பணியிடங்களை அவசரமாக நிரப்பும் தமிழக அரசு !!!
இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே – 3 ஆம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தின் தடுப்பு நடவடிக்கைகள் – முதல்வரின் அறிவிப்புகள்
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |