கொரோனா வைரஸுக்கு 70 வகை மருந்தா..? இந்திய ஆராய்ச்சியாளர்கள் தகவல்..!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதை விட நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் 70 வகையான மருந்துகளை பயன்படுத்துவது சிறந்த பலனை தரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1508 டெக்னீசியன்கள் & 1000 செவிலியர் காலிப்பணியிடங்களை அவசரமாக நிரப்பும் தமிழக அரசு !!!
கொரோனா ஆராய்ச்சியில் இந்தியர்கள்..!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், பல்வேறு நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கொரோனா சிகிச்சைக்கான மருந்து தயாரிப்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்வைத் சுப்ரமணியன், ஸ்ரீவத்ஸ் வெங்கட்ரமணன், ஜோதி பாத்ரா என்ற இந்திய ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இப்போதைக்கு சிறந்த வழி இதான்..!
மனித உடம்பில் உள்ள 332 புரதங்களை, கொரோனா வைரஸ் புரதங்கள், நேரடியாக தாக்குவது தெரிய வந்தது. இதையடுத்து, நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றுக்கு வழங்கப்படும், 70 வகையான மருந்துகள், கொரோனா சிகிச்சைக்கு சிறந்த பலனை தரும் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதை விட இந்த மருந்துகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் பணியில் ஈடுபடுவதே இப்போதைக்கு சிறந்த வழி என அவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தின் தடுப்பு நடவடிக்கைகள் – முதல்வரின் அறிவிப்புகள்
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |