தமிழகத்தில் வேகமெடுக்கும் மர்ம காய்ச்சல் – சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு!
தமிழகம் முழுவதும் காய்ச்சல் மற்றும் சளி போன்றவை அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் அதிக அளவிலானவர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் அரசு சிறப்பு மருத்துவ முகாமினை ஏற்பாடு செய்துள்ளது.
மர்ம காய்ச்சல்:
பொதுவாக மழை காலங்களில் அதிக அளவிலான கொசு உற்பத்தி ஏற்பட்டு பல வகையான பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படும். ஆனால், கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் புதுவகையான காய்ச்சல்கள் மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் ஒரு வித பதற்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் பாதிப்புகள் குறைந்த பின்னர், அதன் மாறுபாடு அடைந்த புது வகை வைரஸ்கள் மற்றும் குரங்கு அம்மை மற்றும் டெங்கு போன்று பல வித பாதிப்புகளால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், தற்போது மர்ம காய்ச்சல் ஒன்று குழந்தைகளை அதிக அளவில் பாதித்து வருகிறது. பச்சிளம் குழந்தைகள் முதல் பள்ளி செல்லும் குழந்தைகள் வரை இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் அலை மோதுகிறது. எனவே, நகராட்சி பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் வீதியெங்கும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தீபாவளிக்கு சொந்த ஊர் போகனுமா? – அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்.. தவறாம படிங்க!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் அதிக அளவில் பரவி வரும் காய்ச்சலை கருத்தில் கொண்டு அங்கு சிறப்பு மருத்துவ முகாம்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. அதன்படி, தினசரி கடலூர் மாவட்டம் முழுவதும் 60 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவ முகாம்களில் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்