தீபாவளிக்கு சொந்த ஊர் போகனுமா? – அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்.. தவறாம படிங்க!

0
தீபாவளிக்கு சொந்த ஊர் போகனுமா? - அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்.. தவறாம படிங்க!
தீபாவளிக்கு சொந்த ஊர் போகனுமா? - அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்.. தவறாம படிங்க!
தீபாவளிக்கு சொந்த ஊர் போகனுமா? – அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்.. தவறாம படிங்க!

நாடு முழுவதும் வரும் அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் அரசு விரைவு பேருந்துகளில் இப்போதிலிருந்தே முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

முன்பதிவு:

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியர்கள் வசிக்கும் பிற நாடுகளிலும் கூட இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. புராண கதைகளின் படி ராமரும் சீதையும் 14 ஆண்டுகள் வனவாசத்தை முடித்து விட்டு திரும்பும் போது அந்த நாளை மக்கள் விளக்கேற்றி கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல மக்களுக்கு தீமைகள் செய்து வந்த அசுரன் நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த நாள் தீபாவளி என்றும் கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பண்டிகை 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இதனால் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தனது சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாட விரும்புவர். மேலும் இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறையும் அளிக்கப்படும் என்பதால் பேருந்து மற்றும் ரயில்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயணம் செய்வர். இந்த நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க பண்டிகைக்கு ஓரிரு மாதங்கள் முன்பாகவே டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டு விடும். அந்த வகையில் தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (செப்.21) முதல் தொடங்க உள்ளது.

தமிழகத்தில் அதிரடியாக மாற்றப்படும் மாவட்ட செயலர்கள்- முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

Exams Daily Mobile App Download

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை தீபாவளி நாள் என தொடர்ந்து மூன்று நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக உள்ளது. அதனால் அதிக எண்ணிக்கையில் பயணிகள் பேருந்துகளில் பயணிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பயணிகளின் முன்பதிவை பொறுத்து விழுப்புரம், சேலம் உள்ளிட்ட 6 போக்குவரத்து கழகங்களில் இருந்து பேருந்துகள் பெறப்பட்டு முன்பதிவில் இணைக்கப்படும். அத்துடன் தீபாவளிக்கு முதல் 2 நாட்களுக்கு கோயம்பேட்டில் நேரடி சிறப்பு டிக்கெட் கவுண்டர்களும் திறக்கப்படும் என்றும் தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!