படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் மற்றும் சிறு தொழில் நிறுவன ஊழியர்களுக்கு சுய வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் மத்திய அரசு ஏகப்பட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
வேலை வாய்ப்பு:
மத்திய மற்றும் மாநில அரசுகள் படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிக்கும் பொருட்டு ஏகப்பட்ட திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், மத்திய அரசின் சார்பாக சிறு குறு நடுத்தர நிர்வாக துறைகளில் பல்வேறு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் மூலமாக கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற மேலாண்மை சார்ந்த தொழில்களில் பல்வேறு வேலை வாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கம் செய்து வருகிறது.
தனியார் வங்கியில் வேலை வேண்டுமா? CSB வங்கியில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!
அதாவது, நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய கைவினை கலைஞர்கள் மற்றும் கிராமப்புற நகர்ப்புற வேலையற்ற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்புகளை அளிப்பதே அரசின் நோக்கமாக இருந்து வருகிறது. இந்த இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பினை அளிக்கும் பொருட்டு மத்திய அரசின் சார்பில் மானியமும் வழங்கப்படுகிறது. அதாவது, பெண்கள், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகிய பயனாளிகளுக்கு கிராமப்புறங்களில் 35% மானியமும், நகர் புறங்களில் 25% வரையிலும் மானியம் வழங்கப்படுகிறது.