விஜய் டிவி Mr. And Mrs. சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் தெரியுமா? பரிசு 10 லட்சமாம்!
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அந்தவரிசையில் உள்ள Mr. And Mrs. சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சி இன்று இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், நிகழ்ச்சியின் வெற்றியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
Mr. And Mrs. சின்னத்திரை:
விஜய் டிவியின் சீரியல்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளதோ, அதே அளவிற்கு விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களும் அதிக ரசிகர்களை கொண்டுள்ளது. இதனால் வார இறுதியில் விஜய் டிவி களை கட்ட ஆரம்பித்து விடும். சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், ஜோடி, நீயா நானா என்று அனைத்துமே பல சீசன்களை கடந்தும் மக்கள் அதனை வெற்றி நிகழ்ச்சிகளாக மாற்றி வருகின்றனர். இந்நிலையில், Mr. And Mrs. சின்னத்திரை சீசன் 3 தற்போது நடந்து வருகிறது. சின்னத்திரையை சேர்ந்த நட்சத்திர ஜோடிகள் கணவன், மனைவியாக கலந்து கொண்டு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இந்த சீசனில், மிகவும் பல பிரபலமான ஜோடிகள்போட்டியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு நடுவராக கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி இருவரும் உள்ளார்கள். போட்டிகளில் ஜோடிகளின் புரிதல் மற்றும் அவர்களுக்குள் உள்ள ஒற்றுமை மற்றும் ஒரே மாதிரியான சிந்தனைகள் மூலம் மதிப்பிடுவார்கள். மொத்தம் 12 பேரில் முதல் பைனலிஸ்ட்டாக ரோஷினி மற்றும் ஜாக் தேர்வு செய்யப்பட்டனர். மற்ற போட்டியாளர்களுக்கு செமி பைனல் போட்டி நடத்தப்பட்டது. அதில் இருந்து காயத்திரி – யுவராஜ், மைனா நந்தினி – யோகேஷ் , சரத் – கிருத்திகா ஆகிய மூன்று ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அறந்தாங்கி நிஷாவை வைத்து பாரதியை லாக் செய்யும் கண்ணம்மா – சீரியலில் நியூ என்ட்ரி! ப்ரோமோ ரிலீஸ்!
இதன் பிறகு நடத்தபட்ட வைல்ட் கார்டு ரவுண்டில் வினோத் – ஐஸ்வர்யா மற்றும் ராஜ்மோகன் – கவிதா இரண்டு ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதனால் மொத்தம் 6 ஜோடிகள் பைனலிஸ்ட்டாக இருந்தனர். இறுதி போட்டி கடந்த வாரம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இன்று மதியம் 3 மணிக்கு இந்த கிராண்ட் பைனல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதில், வெற்றி பெற்ற ஜோடிகள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதில், Mr. And Mrs. சின்னத்திரை சீசன் 3 பைனல் போட்டியில் சரத் – கிருத்திகா ஜோடி வெற்றி பெற்று பரிசு பணத்தை தட்டி சென்றுள்ளனர். இவர்களுக்கு ரூ,10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.