மூர்த்தியை எதிர்த்து கண்ணன், ஐஸ்வர்யாவை வீட்டிற்கு அழைத்து வரும் தனம் – அதிர்ச்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் லேட்டஸ்ட் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பபட்டு வந்தாலும், பலரையும் கவர்ந்துள்ள சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். இந்த சீரியலில் தற்போது முக்கிய கட்டமாக கண்ணன், ஜனார்த்தனன் கடையில் இருந்து பணத்தினை திருடி விட்டார் என்று பொய்யாக பழி சுமத்தப்படுகிறார். ஆனால், மீனா மற்றும் ஜீவா இருவரும் அதனை கண்டுபிடித்து உண்மையாக பணத்தினை திருடியவருக்கு தண்டனை வாங்கி கொடுத்து விடுகின்றனர், இதனால் கோபம் அடையும் அவர் கண்ணனை அடித்து விடுகிறார்.
கண்ணனை அடித்ததை பொறுத்து கொள்ள முடியாத கதிர் அனைவரையும் நன்றாக அடித்து விடுகிறார். கண்ணன் அடிபட்டு இருக்கும் விஷயத்தினை அறிந்து கொள்ளும் தனம் மிகவும் நொந்து போய் விடுகிறார். ஆனால், மூர்த்தி தனது பிடிவாதத்தினை விட்டு கொடுக்கவே இல்லை என்று தான் கூற வேண்டும். இப்படி பல திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மேலும் ட்விஸ்ட்டான ஒரு ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் தனம் வீட்டில் உள்ள அனைவரிடமும் கண்ணன் அடி வாங்கியது பற்றி பேசுகிறார்.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இமான் அண்ணாச்சி – திடுக் தகவல்! ரசிகர்கள் ஷாக்!
தனம் அவ்வளவு பேசியும் மூர்த்தி அமைதியாக இருக்கிறார். அப்போது தனம் தனது வாழ்வில் முதன் முறையாக மூர்த்தியை எதிர்த்து ஒரு காரியம் செய்யப்போவதாக கூறி விட்டு கண்ணன் வீட்டிற்கு செல்லுகிறார். அங்கு கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவிடம் இனி இருவரும் தங்களது வீட்டில் தான் தங்க வேண்டும் என்று கூறி இருவரையும் அழைத்து வந்து விடுகிறார். இதனை பார்த்து விட்டு ஒட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.