அறந்தாங்கி நிஷாவை வைத்து பாரதியை லாக் செய்யும் கண்ணம்மா – சீரியலில் நியூ என்ட்ரி! ப்ரோமோ ரிலீஸ்!
பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது சமீப வாரங்களாக கலகலப்பு கூடியுள்ளது. இந்நிலையில், வரும் வாரத்தில் நகைச்சுவையை கூட்டுவதற்கான சாவியாக கலக்கப்போவது யாரு அறந்தாங்கி நிஷாவை களம் இறக்கியுள்ளனர்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா தொடர் கதையின் நாயகி மாற்றத்தால் சரிவை சந்திக்கும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், தற்போது வழக்கத்தை விட அதிக வரவேற்பை பெற்றுள்ளது. கதையின் போக்கை ரசிகர்கள் விரும்பும் விதத்தில் இயக்குனர் மாற்றி அமைத்துள்ளார். கதையின் வில்லியான வெண்பா குழந்தைபிறப்பின் காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் வெண்பா கதாபாத்திரம் சிறையில் இருப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. வெண்பா இல்லாத சமயத்தில் கதையில் சுவாரசியத்தை அதிகரிக்கும் விதமாக பாரதி மற்றும் கண்ணம்மா விவாகரத்து வழக்கு கொண்டுவரப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு காரணமாக பாரதியும், கண்ணம்மாவும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். கண்ணம்மா எப்படியாவது பாரதியை குழந்தைகளுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று சகித்து கொள்கிறார். ஆனால் பாரதி கண்ணம்மாவை விட்டு எப்படியாவது பிரிந்து விட வேண்டும் என்று தொல்லை செய்து வருகிறார். மேலும் இவர்கள் இருவருக்குமான ரொமான்ஸ் காட்சிகள் தற்போது சீரியலில் அதிக அளவில் இருந்து வருகிறது. இதனால் ரேட்டிங் அதிகரித்து வருவது ஒரு புறம் இருந்தாலும், இதனால் தான் ரோஷினி சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வரும் திங்கள் முதல் சனிக்கிழமை வரையிலான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில்,பாரதியை வம்பிழுக்க கண்ணம்மா பாரதியின் மருத்துவமனைக்கு தலைவலி என்று வருகிறார். உனக்கு எல்லாம் வைத்தியம் பாக்க முடியாது என்று பாரதி கத்த, அப்போது நீதிமன்றத்தின் உத்தரவை நியாபகப்படுத்தும் படி அறந்தாங்கி நிஷாவை வக்கீலாக கண்ணம்மா கூட்டி வருகிறார். அவர், மனைவியின் உயிருக்கு ஏதாவது பாதிப்பு நேர்ந்தால் கணவர் தான் காரணம் என்று சொல்கிறார். இதனால் வேறு வழியில்லாமல் பாரதி வைத்தியம் பார்க்கிறார். அவருக்கு பீஸ் 1500 என்று சொல்ல, நீங்க சாப்பிட்ட பில் 1545, நீங்க தான் எனக்கு தரணும் என்று கண்ணம்மா கூறுவதால் பாரதி கடுப்பாகிறார். இதனால் வரும் வாரமும் மிகவும் கலகலப்பாக பாரதி கண்ணம்மா செல்லும் என்று உறுதியாகிறது.