
சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ்.. விரைவில் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்.. அமைச்சர் நேரு வெளியிட்ட தகவல்..!!
தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் அமைச்சர் நேரு சென்னை மாநகராட்சிக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பூங்காக்களின் மேம்பாட்டு பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி “சென்னையில் 908 பூங்காக்களும், 724 விளையாட்டு அரங்கங்களும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. இதை மேம்படுத்தும் விதமாக தற்போது 32 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணி ரூ.8 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன என்றும், மேலும் 2025 – 2026 ஆம் ஆண்டில் 30 புதிய பூங்காக்கள் ரூ.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளன என்று அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்”.























