TN Weather Update: தமிழகத்தில் அடுத்த 3 நாளுக்கு கனமழை வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை..!!
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழல் ஆனது ஏப்ரல் 22 வரை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி இன்று (17-04-2025) சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், “ஏப்ரல் 18 முதல் 20 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரிக்ககூடும் என்றும், சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக கடலோர பகுதிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



























